top of page
Group 39.png

காசா நிதியத்திலிருந்து பெறப்பட்ட USD 590,000, பாலஸ்தீன் அரசிற்கு ஒப்படைப்பு.

Author Logo.png

SM Safeeth

8/8/24

காசா பகுதியில் நடக்கும் போரால் இடம்பெயர்ந்த குழந்தைகளின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய ஸ்ரீலங்கா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட "காசா குழந்தைகள் நிதி" மூலம் மேலும் USD 590,000 கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்த நிதி நேற்று (07) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், பாலஸ்தீன் அரசாங்கத்துக்கு அதிகாரபூர்வமாக வழங்கப்பட்டது என ஜனாதிபதி ஊடக பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.


பாலஸ்தீன் தூதுவர் டாக்டர் ஜுஹைர் எம்.எச். ஸைத் மற்றும் ஐ.நா. வளர்ச்சி திட்டத்தின் (UNDP) இலங்கை பிரதிநிதி அசுசா குபோடாவிடம், இதற்கான அதிகாரபூர்வ ஆவணங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் ஒப்படைத்தார்.


2024 ஆம் ஆண்டு மார்ச் 4 ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது, காசா பகுதியில் சிக்கித் தவிக்கும் 10 லட்சம் குழந்தைகளின் முக்கிய செலவுகளைக் கையாள ஸ்ரீலங்கா அரசாங்கம் USD 1 மில்லியன் நிதியுதவி வழங்குவதற்கு ஒப்புக் கொண்டது. இதற்கான நிதி ஒதுக்கீட்டை அமைச்சரவை அங்கீகரித்தது.

bottom of page